சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-ஆவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியானது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் தொடரை அடுத்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதில் 3-வது ஒருநாள் போட்டி சென்னையில் மார்ச் 22 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், 3-வது ஒருநாள் போட்டியைக் காண்பதற்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னை ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 13 அன்று பேடிஎம் மற்றும் இன்சைடர் இணையத்தளம் வழியாக விற்கப்படும். மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 18 அன்று டிக்கெட்டுகள் விற்கப்படவுள்ளன.
மேலும், டிக்கெட்டுகளின் குறைந்த விலை – ரூ. 1200 என்றும் அதிக விலை – ரூ.10,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 1200 டிக்கெட்டை மார்ச் 18 அன்று நேரில் சென்றுதான் வாங்க முடியும். இணையம் வழியாக ரூ. 1500, ரூ. 3000, ரூ.5000, ரூ. 6000, ரூ.8000, ரூ. 10000 மதிப்புகளை டிக்கெட்டுகளை வாங்க முடியும்.
இண்டிகோ விமானத்தின் கழிவறையில் சிகரெட் பிடித்த இளம்பெண் கைது