நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளிவந்த டிஎஸ்பி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில், நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
மேலும், இப்படமானது க்ரைம் மற்றும் த்ரில்லர் களத்தைக் கொண்ட ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்திற்கும் இசையமைத்த கன்னடத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான பி. அஜ்னீஷ் லோக்நாத் ‘காந்தாரா’ பட வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்.
மேலும், நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள மைக்கேல் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அசரவைக்கும் அவதார் படத்தின் வசூல் – வெளிவந்த தகவல்!