Thursday, March 21, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அசரவைக்கும் அவதார் படத்தின் வசூல் - வெளிவந்த தகவல்!

    அசரவைக்கும் அவதார் படத்தின் வசூல் – வெளிவந்த தகவல்!

    அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உலகளவில் அதிகமாக வசூலித்த திரைப்படங்களின் வரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

    அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தை, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். 

    கடந்த 2009-ம் ஆண்டு ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதார் திரைப்படம் பல மாயங்களை நிகழ்த்தியது. கூடவே வசூல் சாதனைகளையும் நிகழ்த்தியது. 

    அவதார் திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தபோதே, இத்திரைப்படத்தில் புதுமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இது ரசிகர்களுக்கு புது வித அனுபவமாக இருந்தது. 

    இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வெளிவந்தது. உலகம் முழுவதும் 52,000-த்திற்கும் அதிகமான திரைகளில், 160-க்கும் அதிகமான மொழிகளில் அவதார் திரையிடப்பட்டது. 

    இதனால், அவதார்-2 மாபெரும் வசூல் சாதனையை புரியும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், தற்போது அவதார் திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. அதன்படி, தற்போது வரை அவதார் திரைப்படம் ரூ.17,251 கோடி வசூல் செய்துள்ளது. டாலர் மதிப்பில் இது 2.117 பில்லியன் டாலராகும். 

    இந்த வசூல் மூலம், உலகளவில் அதிக வசூல் புரிந்த திரைப்படங்களில் அவதார்-2 நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம், நான்காவது இடத்தில் இருந்த ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படம் 2.071 பில்லியன் டாலர் வசூலித்தது. 

    வசூலில் உலகளவில் முதல் மூன்று இடங்களில் உள்ள திரைப்படங்கள்:
    • அவதார் – 2.92 பில்லியன் டாலர்
    • அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – 2.7 பில்லியன் டாலர்
    • டைட்டானிக் – 2.19 பில்லியன் டாலர்

    கள்ளக்குறிச்சி மாணவியின் மரண வழக்கு; விசாரணை நிறைவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....