நடிகர் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது மழை பிடிக்காத மனிதன், அக்னிச் சிறகுகள், பிச்சைக்காரன்-2 போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் பிச்சைக்காரன்-2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது.
இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இயக்கவும் செய்கிறார் விஜய் ஆண்டனி. மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது, படகு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டிவிட்டதாக கூறினாலும், முகத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.