மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று சாத்தப்பட்டது.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 41 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. அதன்பிறகு, கோயில் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக கடந்த 14 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதன் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாகக் காணப்பட்டது.
இந்நிலையில், பூஜைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அதன் பிறகு அரிவராசனம் பாடி நடை சாத்தப்பட்டது. இதன்பிறகு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனில் மட்டும் சபரிமலை சாமி தரிசனத்திற்கு 45 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியானது, ஆர்.ஜே.பாலாஜியின் ‘ரன் பேபி ரன்’ பட டிரெய்லர்