Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்; உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

    நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்; உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

    இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண் தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    உத்தர பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தெருக்களில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித்திரியும் காணொளி வைரலாகி வருகிறது. 

    கடந்த ஜனவரி 29 ஆம் தேதி இரவு நிர்வாணமான நிலையில், பெண் ஒருவர் வீட்டு கதவைத் தட்டியதாகக் கூறப்படும் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் தொடர்ந்து ஜனவரி 31 ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் ராம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

    அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் என்றும், புகார்தாரரின் வீட்டு வாசலில் இருந்து அந்தப்பெண் வெளியேறியபோது அந்தப் பெண்ணை இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பின்தொடர்ந்ததாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக ராம்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்தப் பெண்ணின் நோக்கத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை என்றும், மேலும் இதுகுறித்த விவரங்களை சேகரிக்க அந்தப் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வெளியானது, தளபதி 67 திரைப்படத்தின் புரோமோ வீடியோ; குதூகலத்தில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....