Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்திய மீனவர்கள் கைது- மத்திய அரசை விளாசும் வைகோ

    இந்திய மீனவர்கள் கைது- மத்திய அரசை விளாசும் வைகோ

    இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல், மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் செயலானது, மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்.

    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில், கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இலங்கை நாட்டு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதன் பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி, இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அந்நேரத்தில், ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, மர்க்கோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை தடுத்து நிறுத்தி, அதிலிருந்த 12 பேரையும் கைது செய்து, விசைப்படகுடன் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர்.

    கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதியுடன், மீன்பிடித் தடைக் காலம் 61 நாட்கள் முடிந்ததும், மீனவர்கள் மீண்டும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜூலை 1 ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த 12 மீனவர்கள் வேதாரண்யம் அருகே உள்ள இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அச்சமயத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக 12 மீனவர்களையும் கைது செய்து, அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

    நேற்று ஜூலை 4 ஆம் தேதி, இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கப் புறப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்கள கடற்படையினர், தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்ததோடு, மீன்பிடிக் கருவிகள் மற்றும் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்த 5 பேரையும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மீன்பிடித் தடைக் காலம் முடிந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கடலுக்குச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர், இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்வது மிகவும் தவறான செயல். பொருளாதாரத்தில் சரிவைக் கண்டுள்ள இலங்கைக்கு, இந்தியா உதவி செய்த போதும் சிங்கள அரசு, இந்திய மீனவர்களை கைது செய்வது தொடர்கிறது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, இலங்கை அரசிற்கு சரியான முறையில் அழுத்தம் கொடுத்து, கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயமாகும்.

    இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, மீனவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் சிங்கள அரசின் அராஜகத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

    விவோ நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....