சாலையில் கட்டிப் பிடித்த படியே சென்ற காதல் ஜோடி மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் இருசக்கர வாகனத்தில் இளம் ஜோடி கட்டிபிடித்த படியே சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் காணொளியை வைத்து ஆய்வு செய்தனர். லக்னோ மைத்திய மண்டலத்தின் துணை காவல் ஆணையர் அபர்ணா ரஜத் கவுசிக், இந்தக் காணொளி லக்னோவில் இருந்து ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்தார்.
இதைத்தொடர்ந்து, காணொளியில் கட்டிபிடித்த படி சென்ற ஜோடியைத் தேட இரண்டு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் சென்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அந்த ஜோடி மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சாலையில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காணொளியில் காணப்பட்ட ஜோடி, இரண்டு பெரும் பெண்கள் எனவும் முழு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
नबाबों का शहर Lucknow उत्तर प्रदेश pic.twitter.com/dZ92Sn1R0E
— sakshi (@ShadowSakshi) January 17, 2023
அஜித்குமாரின் திரைப்படத்தில் இந்த நடிகையா? – வெளிவந்த அப்டேட்!