Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியா-மியான்மர் எல்லையில் இரு தமிழர்கள் சுட்டுக் கொலை

    இந்தியா-மியான்மர் எல்லையில் இரு தமிழர்கள் சுட்டுக் கொலை

    மியான்மரில் வசித்து வந்த இரண்டு தமிழர்களை ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளது.

    இந்தியா-மியான்மர் எல்லையான மணிப்பூரில் உள்ள மோரோவில், மோகன் (வயது 28), ஐயனார் (வயது 35) எனும் இரு தமிழர்கள் வசித்து வந்தனர். இவர்களில் மோகன் ஒரு ஆட்டோ ஓட்டுநர். ஐயனார் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்தவர்.

    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 05) அன்று மியான்மர் எல்லையான டாமு என்ற பகுதியில், மோகன், ஐயனார் இருவரது உடலும் உள்ளூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. ‘பியூ ஷாவ் டீ’ (Pyu Shaw Htee) எனப்படும் ஆயுதம் ஏந்திய கும்பல், இந்த கொலையை நிகழ்த்தி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தான் மோகனுக்கு திருமணம் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

    செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணிக்கு இவர்கள் இருவரும் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மோட்டார் வாகனத்தில் துப்பாக்கியுடன் வந்தவர்கள், இருவரது தலையிலும்  சுட்டுள்ளனர். இந்திய-மியான்மர் எல்லையிலிருந்து நன்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாமு எனும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்து போன இருவரது உடல்களையும் கைப்பற்றிய உள்ளூர் அதிகாரிகள், டாமுவிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

    இது குறித்து மொரேயில் உள்ள தமிழ் சங்கத்தினர், மோகன், ஐயனார் ஆகிய இருவரையும் உளவாளிகள் எனக்கருதி மியான்மர் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கலாம்’ என்று கூறியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த இருவரும் எதற்காக மியான்மர் எல்லைக்குள் சென்றனர் என்பது பற்றி மணிப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்திய-மியான்மர் பகுதியில் உள்ள மோரே நகரத்தில் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல மாநில மக்கள் வாழும் இந்த பகுதியில் தமிழர்கள் பெரும்பாலான அளவில் வசித்து வருகின்றனர். இந்த கொலையினை அடுத்து பல்வேறு குழுக்களை சேர்ந்த ஆறு அமைப்புகள் கொல்லப்பட்ட இருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என  மோரேவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இரு முக்கிய தீவிரவாதிகளைப் பிடித்த காஷ்மீர் மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....