காஸ்கஞ்ச் குடும்பநல நீதிமன்றத்தில் இரு பெண் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது காஸ்கஞ்ச் எனும் மாவட்டம். இந்த மாவட்டத்தின் குடும்ப நல உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குகாக இரு பெண் வழக்கறிஞர்கள் தங்களது மனுதாரர்களுக்காக ஆஜராகினர்.
வழக்கு முடிந்து வெளியே வந்ததும் இரு தரப்பு வழக்கறிஞர்களும் மோதிக்கொண்டனர். ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்தும், தலைமுடியை இழுத்து விட்டும் தாக்கிக்கொண்டனர். இருவரையும் பிரித்துவிட சக வழக்கறிஞர்கள் முயன்றும் முடியவில்லை.
பின்பு, அங்கிருந்த பெண் காவலர்கள் தலையீட்டு இரு வழக்கறிஞர்களையும் தனித்தனியே பிரித்தனர். வழக்கறிஞர்களின் பெயர்களும், அவர்கள் சண்டைப் போட்டுக்கொண்டதற்கான காரணமும் இதுவரை வெளியாகவில்லை.
Kasganj court two advocates setellment …😄 pic.twitter.com/rVRK4TWA6n
— Abhishek Saxena (@abhis303) October 29, 2022
இருப்பினும், நீதிமன்றத்தின் தூண்களாக கருதப்படும் வழக்கறிஞர்களே, நீதிமன்ற வளாகத்தில் சண்டையிட்டுக்கொண்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படியான சம்பவங்கள் நீதிமன்றத்தின் தரத்தை குறைப்பனவாக இருப்பதாக நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகக் கோப்பை அணிகள் ஆடுவதற்கா? மழை ஆடுவதற்கா? – தொடர்ந்து ஏமாற்றத்தில் ரசிகர்கள்