துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தினால் பலியானோர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம், துருக்கி மற்றும் சிரியாவில் பல்வேறு அசம்பாவிதங்களை நிகழ்த்தி வருகிறது.
மீட்பு பணிகள் முடிவுற்ற நிலையில் கட்டிடங்களை தகர்க்கும் பணிகள் தற்போது துருக்கியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரித்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும், துருக்கியில் கடந்த 20-ஆம் தேதி மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 6.4 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
துருக்கியில் நிகழ்ந்த இந்த அசம்பாவிதங்கள் உலகெங்கும் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
முன்னதாக, சமீபத்தில் சென்னை அண்ணா சாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை – தொழிற்சாலை திருத்த மசோதா நிறைவேற்றம்..