Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பொன்னியின் செல்வன் சொன்ன தேதியில் ரிலிஸாகுமா? - படக்குழு பதில்!

    பொன்னியின் செல்வன் சொன்ன தேதியில் ரிலிஸாகுமா? – படக்குழு பதில்!

    பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் சொன்ன தேதியில் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது.

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகிய திரைப்படம்தான், பொன்னியின் செல்வன். 

    கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. 

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளிவந்து பற்பல சாதனைகளை நிகழ்த்தியது. குறிப்பாக, 450 கோடி என்ற மாபெரும் வசூல் சாதனையை புரிந்தது. 

    இதைத்தொடர்ந்து, சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல்கள் வேகமாக பரவின.

    இதனால், பொன்னியின் செல்வன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், பொன்னியின் செல்வன்-2 சொன்ன தேதேயில் வெளிவரும் என்று படக்குழு சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், விரைவில் படத்திற்கான புரோமஷன் பணிகள் ஸ்டார்ட் ஆக உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் விபத்து.. வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....