Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்திய-பாகிஸ்தான் போர் வெற்றி; கார்கில் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய ரங்கசாமி

    இந்திய-பாகிஸ்தான் போர் வெற்றி; கார்கில் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய ரங்கசாமி

    1971ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய தினத்தையொட்டி

    அதனை நினைவு கூறும் வகையில் புதுச்சேரியில் கார்கில் நினைவிடத்தில் முதலமைச்சர் ரங்கசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினார்கள். முப்படை நலத்துறையினரும், காவல் துறையினரும் மரியாதை செலுத்தினார்கள்.

    விழாவில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றிhj தெரிவித்துக்கொண்டனர். கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் போர் வெற்றி தினத்தை கொண்டாட வேண்டும் என்று கோரிக்கையை வைத்து வந்தோம். அதற்கு நடவடிக்கை எடுத்து இவ்வாண்டு முதல் முறையாக வெற்றி விழாவை கொண்டாடும் முதலமைச்சருக்கும், புதுச்சேரி அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

    சினிமா பாடலுக்கு நடனமாடியதால் பெண் காவலர்களுக்கு வந்த பிரச்சனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....