தந்தை ஒருவர், உயிரிழந்த தனது மகளின் கைகளைப் பற்றியபடி இரண்டு நாள்களாக உதவிக்காக காத்திருக்கும் புகைப்படங்கள் காண்போரை உருக வைத்துள்ளது.
துருக்கியில் நேர்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரையில், 21,000-த்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 25,000-த்தை தாண்டுமென கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மீட்பு பணியானது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணிகளின் போது நிகழும் பல சம்பவங்கள் வீடியோவாக இணையதளத்தில் வெளிவந்து பலரையும் துயரத்தில் ஆழ்த்தியும், மனதை உருக்கியும் வருகிறது.
இந்நிலையில், தந்தை ஒருவர் தனது இடிந்த வீட்டுக்குள் சிக்கி உயிரிழந்த தனது மகளின் கைகளைப் பற்றியபடி இரண்டு நாள்களாக உதவிக்காக காத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.
#Turkey – Mesut Hancer holds the hand of his 15-year-old daughter Irmak, who died in the earthquake in Kahramanmaras.
📷 @AdemAltan3 #AFP pic.twitter.com/69ipyEOcJD— AFP Photo (@AFPphoto) February 8, 2023
இவை மனதை உலுக்குவதாக உள்ளது. மேலும், அவரை எத்தனையோ முறை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல மீட்புப் படையினர் முயன்றும் அந்த முயற்சி தோல்வியுற்றதாக கூறப்படுகிறது.
மதுபானக் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்; உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!