Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமனைவியை தாக்கிய கணவன்; குறுக்கே வந்த காவல்துறை மீதும் தாக்குதல்!

    மனைவியை தாக்கிய கணவன்; குறுக்கே வந்த காவல்துறை மீதும் தாக்குதல்!

    மதுபோதையில் மனைவியை நடுவீதியில் தாக்கிய கணவன், சமாதானப்படுத்த முயன்ற காவல்துறையினரையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    திருச்சி மாவட்டம், மணிகண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். 

    இந்நிலையில், இவர் வழக்கம்போல் மனைவியை அழைத்துக்கொண்டு வந்தபோது விக்னேஷ்வரன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில், அவரது மனைவியை கடுமையாக தாக்கினார். இதைப்பார்த்த ஆட்டோ ஓட்டுனர்களும் பொதுமக்களும் தடுத்து நிறுத்த முயன்றனர். மேலும் விக்னேஷ்வரன் பொதுமக்களை கடுமையாக பேசியுள்ளார். 

    அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விக்னேஷ்வரனை சமாதானப்படுத்த முயற்சித்தனர். மேலும் அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டனர். அப்போது தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்னேஷ்வரன் காவல்துறையினரை தாக்க முயன்றார். 

    இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து விக்னேஷ்வரன் காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். பிறகு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விக்னேஷ்வரன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    1000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யஹூ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....