தமிழ்நாட்டில் நாளை மறுதினம் அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை முதலே சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால், காலை அலுவலகம் செல்வோரும் வாகன ஓட்டிகளும் சற்று சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் தற்போது நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விஜிகுப்புறம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த மழை இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபடச்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நோயாளிக்கு சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய விவகாரம்.! மருத்துவமனையை இடிக்க மேம்பாட்டு ஆணையம் அதிரடி உத்தரவு.!