டிக் டாக் மீதான குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்க அதன் சிஇஓ சவ் சி சூவ் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜரானார்.
உலக நாடுகளில் மிகவும் பிரபலமாக இயங்கி வரும் செயலியாக சீனாவின் டிக்டாக் உள்ளது. ஆனால், இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் . இந்த சீன செயலி இந்தியர்களின் தரவுகளை களவாடுவதாகவும், தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகவும் அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
இப்போது, இப்படியான ஒரு சூழல் அமெரிக்காவில் எழுந்துள்ளது. இதனால், டிக்டாக் நெருக்கடியை சந்தித்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரையில், கடந்த டிசம்பர் முதலே டிக்டாக் செயலிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெள்ளை மாளிகையில் தொடங்கி, பாதுகாப்பு துறையினர் வரை டிக்டாக் செயலிகளை பயன்படுத்த அமெரிக்க தடை விதித்தது. பின்னர் அரசு டிஜிட்டல் சாதனங்கள் அனைத்துக்கும் இந்த தடை விரிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமெரிக்கர்களின் தரவுகளை டிக்டாக் வாயிலாக, சீனா சேகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், டிக்டாக் பங்குகளை விற்றுவிடுமாறு அதன் சீன உரிமையாளர்களுக்கு அமெரிக்கா நெருக்கடி தந்து வருவதாக சீனா தற்போது குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், டிக் டாக் மீதான குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்க அதன் சிஇஓ சவ் சி சூவ் நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜரானார். அப்போது, ”எங்கள் நிறுவனம் சீனாவுக்காகவோ, பிற நாடுகளுக்காகவோ செயல்படவில்லை என்று நான் உறுதியாக கூறுகிறேன். எங்கள் தளத்தை 150 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் விரும்புகின்றனர். அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்பது நன்கு தெரியும்” என்றார்.
மேலும், ஐந்து மணி நேரம் நீடித்த விளக்கத்தில் டிக் டாக் உலகளாவிய நிறுவனம், சிங்கப்பூர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் அதன் தலைமையகம் உள்ளது டிக் டாக் உளவு பார்க்கிறது என்ற கருத்து முற்றிலும் கற்பனையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டருக்கு எதிராக களமிறங்கிய புதிய செயலி; முன்னாள் சிஇஓ செய்த செயல்