திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு, திருச்சி முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நான்கு போரையும் விடுதலை செய்யக்கோரி திருச்சியில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினரின் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அனுமதியை மீறி ஆர்ப்பாட்டமானது பொதுக்கூட்டம் போன்று மேடை அமைத்து நடைபெற்றது.
இதில் வன்முறையை தூண்டும் வகையில் அவதூறாக பேசிய சீமான் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் மீது ஐபிசி 143 சட்ட விரோதமாக கூடுதல், ஐபிசி 153 செய்யத் தூண்டுதல், ஐபிசி 504 அமைதியை சீர்குலைக்க தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு