Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதிருட சென்ற இடத்தில் கதவின் இடையே தலை சிக்கியதால் உயிரிழந்த திருடன்; அதிர்ச்சி சம்பவம்!

    திருட சென்ற இடத்தில் கதவின் இடையே தலை சிக்கியதால் உயிரிழந்த திருடன்; அதிர்ச்சி சம்பவம்!

    திருட சென்ற இடத்தில் கதவின் இடையே தலை சிக்கியதால் திருடன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டம், தனியல்பூர் என்ற பகுதியில் விசைத்தறி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலை நசீம் என்பவருக்கு சொந்தமானது ஆகும். இதனிடையே கடந்த 2 நாட்களாகவே போதுமான வேலை இல்லாததால் ஆலை மூடப்பட்டிருந்தது.

    இதையறிந்த ஜாவித் என்ற நபர் விசைத்தறி ஆலைக்குள் திருடுவதற்காக உள்ளே நுழைய முயற்சி செய்தார். இந்நிலையில் ஆலை கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்து. இது தெரியாமல் சென்ற ஜாவித், தலையை உள்நுழைத்து செல்ல முயன்றார்.

    அப்போது தலை மட்டும் உள்பக்கமாகவும், கழுத்து முதல் கால் வரை வெளிப்பக்கமாகவும் சிக்கிக்கொண்டது. கதவு இடையே சிக்கிய ஜாவித் அதிலிருந்து வெளியே வர வெகுவாக முயற்சி செய்தும், மீள முடியாமல் மூச்சு திணறி இறந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் இன்று காலை ஆலை அருகே சென்ற நபர்கள் இந்தச் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் ஜாவித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

    இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை! காரணம் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....