அரசு மருத்துமனையை காணவில்லை என கரூரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. குளித்தலை, தோகைமலை, நங்கவரம், லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம், பஞ்சப்பட்டி, அய்யர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர், காந்தி கிராமத்தில், மருத்துவக் கல்லூரி உள்ளதால் அரசு மருத்துமனையை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக உயர்த்துவதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில், காணவில்லை தமிழக அரசே! கண்டுபிடித்து கொடு! குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை. திருடி சென்றவர்களை கண்டுபிடித்து, சட்ட பூர்வமான நடவடிக்கை எடுத்து, எங்கள் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை குளித்தலை மக்களிடம் ஒப்படைத்திடு! என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் ட்ரெண்டான ”ரஜினி – கமல்” புகைப்படங்கள்.. ஜெயிலர், இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்