Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்

    உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்

    தெலுங்கானா மாநிலத்தில் நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் உள்ள பார்ட்டி கிராமத்தில் நேற்று சித்தையா என்பவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சித்தையாவின் உறவினரான மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது முத்யம் என்ற இளைஞர் கலந்துகொண்டார். 

    திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, ஆடல்-பாடல் கலைநிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் முத்யம் உற்சாகமாக நடனம் ஆடியுள்ளார். அப்போது, முத்யம் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு பரிசோதை செய்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

    19 வயதான முத்யம் என்ற இளைஞர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

    ‘தமிழ் படங்களில் நடிப்பேன் ஆனால்… ‘ – நடிகை ஸ்ரேயா பேட்டி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....