Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'தமிழ் படங்களில் நடிப்பேன் ஆனால்... ' - நடிகை ஸ்ரேயா பேட்டி

    ‘தமிழ் படங்களில் நடிப்பேன் ஆனால்… ‘ – நடிகை ஸ்ரேயா பேட்டி

    இனி வேலை செய்யும் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்கதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் என ஸ்ரேயா தெரிவித்துள்ளார். 

    நடிகர் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகைதான் ஸ்ரேயா. இவர் நடிப்பில் சமீப காலமாக தமிழில் குறிப்பிடும்படியான படங்கள் வெளிவரவில்லை. 

    இந்நிலையில், நடிகை ஸ்ரேயா நடிப்பில் கப்சா திரைப்படம் பான் இந்தியா முறையில் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்த நேர்காணலில் ஸ்ரேயா தமிழ் திரைப்படங்களில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். 

    அவர் பேசியதாவது: 

    தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தமிழ் சினிமா எனக்கு நிறைய நல்ல படங்களைக் கொடுத்துள்ளது. மேலும், ஷங்கர் சார் போன்ற பெரிய இயக்குநர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன்.

    திருமணமாகி குழந்தைப் பெற்றது, பிறகு கோவிட் என ஒரு சின்ன பிரேக் இருந்தது உண்மைதான். குறிப்பாக, கோவிட் காலத்தில், மீண்டும் வேலை செய்வோமா என்ற நிலைதான் பலருக்கும் இருந்தது. 

    அதனால், இனி வேலை செய்யும் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்கதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன். அதேநேரத்தில், நல்ல படங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். நான் நடிக்கும் படங்களை நாளை என் மகள் ராதா வளர்ந்து பெரியவளாகும்போது பார்த்து பெருமைப்பட வேண்டும்.

    என தெரிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக – திமுக இடையே கடும் வாக்குவாதம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....