Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலகின் வயதான நபர் இறந்தார்..

    உலகின் வயதான நபர் இறந்தார்..

    உலகின் வயதான நபராக அறியப்பட்ட ஆண்ட்ரே தனது 118-ஆவது வயதில் இறந்துள்ளார். 

    பிரான்ஸை சேர்ந்தவர் ஆண்ட்ரே. இவரின் இயற்பெயர் லூசில் ராண்டன். 1904-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி பிறந்த இவர் தனது 26-ஆவது வயதில் கத்தோலிக்க கிறிஸ்தவராக மாறி ஞானஸ்தானம் பெற்றார். 

    இதைத்தொடர்ந்து, 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் தனது 41வது வயதில் கன்னியாஸ்திரியானார். அந்நேரத்தில்தான், தன் பெயரை இவர் ஆண்ட்ரே என மாற்றிக் கொண்டார்.

    இரண்டாம் உலகப் போரின்போது குழந்தைகளை பராமரித்து வந்த இவர், 28 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோரை பராமரிப்பதில் செலவிட்டார். 

    உலகின் பெரும் தொற்றாக கருதப்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சல், கொரோனாவை சமாளித்து மீண்டு வந்த ஆண்ட்ரே தன்னுடைய 118 வயதில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அங்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி, கானே டனகா என்ற ஜப்பனிய பெண், தன்னுடைய 119 வயதில் இறந்தபிறகு ஆண்ட்ரே உலகின் மிக வயதான நபராக அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் கோவில் ஊழியர் கொலை – நிவாரணம் அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....