Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபடகை நிறுத்தாமல் சென்றதால் மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு! அதிர்ச்சியில் மக்கள்

    படகை நிறுத்தாமல் சென்றதால் மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு! அதிர்ச்சியில் மக்கள்

    ராமநாதபுர கோடியக்கரை அருகே நடுக்காட்டில் 10 மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில், மீனவர் ஒருவர் காலில் குண்டு துளைத்து தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    காரைக்காலில் இருந்து கடந்த 15 ஆம் தேதி படகில் 10 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை ஹெலிகாப்டரில் வந்த கடற்படையினர், படகை நிறுத்த அறிவுறித்தியுள்ளனர். அப்போது படகு நிற்காமல் சென்றதால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 மீனவர்கள் காயமடைந்தனர். 

    இதையடுத்து, விமானப்படையினர், ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் பருத்து ஹெலிகாப்டர் மூலம் சென்று காயமடைந்த 10 மீனவர்களை அழைத்து வந்து முதலுதவி செய்தனர். 

    இதில், மயிலாடுதுறை மாவட்டம், மணகிரி பகுதியைச் சேர்ந்த மீனவர் காலில் குண்டு துளைத்து இருந்ததால் கடற்படையினர் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

    இந்தச் துப்பாக்கி சூடு நடத்தியது இந்திய கடற்படையினர் என்று காயமடைந்த மீனவர் தெரிவித்துள்ள நிலையில், அதனை இந்திய கடற்படையினர் மறுத்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது. 

    மேலும், லேசாக காயமடைந்த மீனவர்கள் கடற்படை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: அதிகாரம் இன்று என்னிடம் இருந்திருந்தால் ! ‘பாட்டாளி மாடல்’ ஆட்சி எப்படி இருக்கும் என விவரித்த அன்புமணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....