உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று (அக்டோபர் 2) நடந்த துர்கா பூஜையில் தீ விபத்து ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், பதோஹி பகுதியில் நடந்த துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 3 பேர் இறந்தனர்.
இந்நிலையில், இன்று காலை (அக்டோபர் 3) மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால், துர்கா பூஜை பந்தல் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தீ விபத்தில் 12 வயது சிறுவன், 10 வயது சிறுவன் மற்றும் 45 வயதுடைய பெண் ஆகியோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தீ விபத்தில் சிக்கிய 22-க்கும் மேற்பட்டோர் பலத்த தீ காயங்களுடன் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழக மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#UttarPradesh #Bhadohi #Durgapuja2022 #Accident #Emergency
The Death toll rise to 3,
burnt more than 64, reported.#kaustuva pic.twitter.com/Ylof3sqNbU— Kaustuva R Gupta (@KaustuvaRGupta) October 3, 2022
இதையும் படிங்க:இனி போன் வந்தால் ‘ஹலோ’க்கு பதில் ‘வந்தே மாதரம்’ சொல்லணும்! அரசு ஊழியர்களுக்கு உத்தரவு…