ஹிலியம் சிலிண்டர் வெடித்து பலூன் வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தீபாவளியாலும், பண்டிகை காலம் என்பதாலும் திருச்சி மெயின்கார்டுகேட் பகுதிக்கு அருகே உள்ள துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், வாகனங்களும் நிறையவே இருந்தன. அனைவரும் அவரவர் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தால் ஏற்பட்ட சத்தத்தால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. திடீரென்று எப்படி வெடி விபத்து என தவிக்கையில், பலூன் வியாபாரி ஒருவர் ஆட்டோவில் ஹிலியம் சிலிண்டரை ஏற்ற முயன்றபோது, அந்த சிலிண்டர் வெடித்து வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த பலூன் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராடினால் ‘எஸ்மா’ சட்டம் பாயும்-தமிழிசை எச்சரிக்கை