செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பசுமை உரக்குடிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பசுமை உரக்குடில் அருகில் நேற்று இரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீர் அடித்து அணைக்க முயன்றனர்.
இருப்பினும் அங்கிருந்த மரக்கட்டைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதையடுத்து, தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பிகள் சென்றுக் கொண்டிருந்த நிலையில், தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால், அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பெண் ஓட்டுநர் பணி அமர்வு