தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென் தமிழக கடேலார மாவட்டங்கள் மற்றும் அதைன ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு 01.03.2022-தேதி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 02.03.2022-தேதி ஓரிரு இடங்களில் மட்டும் கன மழை பெய்யக்கூடும். தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்:
சென்னையை பெருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு காலை நேரங்களில் பனி மூட்டத்துடனும் மற்ற நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் 27.02.2022 முதல் 02.03.2022 வரை பலத்த சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.