Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி

    பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழக பால்வளத்துறை அமைச்சகர் சா.மு.நாசருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமைச்சர் நாசர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

    இதுகுறித்து அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 

    “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று   உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.”

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    பாமக நிறுவனர் ராமதாசுக்கும் கொரோனா தொற்று!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....