Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஜல்லிக்கட்டு தொடர்பாக நிலவிய குழப்பம்... பதிலளித்துள்ள தமிழக அரசு

    ஜல்லிக்கட்டு தொடர்பாக நிலவிய குழப்பம்… பதிலளித்துள்ள தமிழக அரசு

    ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படும் கலாசார திருவிழாக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. இப்படியான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைத்‌ தொடர்ந்து குடியரசுத்‌ தலைவர்‌, தமிழக ஆளுநரின்‌ ஒப்புதலுடன்‌ ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை இயற்றினார் . அதன்படி, ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நடைபெற்று வருகிறது. 

    இந்தச் சூழலில், தற்போது பீட்டா, கூபா உள்ளிட்ட 15-க்கும்‌ மேற்பட்ட அமைப்புகள்‌ ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுமென்றும்‌, காட்சிப்படுத்தப்பட்ட விலங்கினங்கள்‌ பட்டியலில்‌ காளைகள்‌ உள்ளன என்றும்‌ கூறி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதின்றத்தில்‌ மனு தாக்கல்‌ செய்தனர்‌. இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இதனால், இம்முறை தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில், ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

    ஈரம் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் கூட்டணி..ஆவலில் ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....