Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஈரம் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் கூட்டணி..ஆவலில் ரசிகர்கள்

    ஈரம் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் கூட்டணி..ஆவலில் ரசிகர்கள்

    இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் மீண்டும் ஒரு திரில்லர் திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம், ஈரம். இத்திரைப்படத்தில் ஆதி நடித்திருந்தார். மிகச் சிறந்த திரில்லர் திரைப்படமான உருவான ஈரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

    இதைத்தொடர்ந்து, அறிவழகன் இயக்கிய வல்லினம் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இத்திரைப்படத்தின் படத்தொகுப்பாளருக்கு தேசிய விருது கிடைத்தது. 

    இதன்பின்பு, அறிவழகன் இயக்கிய ஆறாது சினம், குற்றம் 23 போன்ற திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் திரில்லர் திரைப்படத்தை இயக்குநர் அறிவழகன் இயக்கவுள்ளார். 

    இத்திரைப்படத்தில், ஈரம் திரைப்படத்தில் நடித்த ஆதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆதி-அறிவழகன் இருவரும் 13 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது இம்மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்படுகிறது.

    கோல்டன் குளோப் விருதில் ஆர்ஆர்ஆர்; உற்சாகத்தில் படக்குழு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....