Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையை சேர்ந்தவருக்கு ஐந்தாவது முறையாக ஆணழகன் பட்டம்...குவியும் பாராட்டுகள்..

    சென்னையை சேர்ந்தவருக்கு ஐந்தாவது முறையாக ஆணழகன் பட்டம்…குவியும் பாராட்டுகள்..

    தாய்லாந்தில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திரன் மணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று பல தரப்பையும் கவர்ந்துள்ளார். 

    தாய்லாந்தில் உள்ள புகேட் நகரில் நேற்று உலக ஆணழகன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், உலகம் முழுவதிலிருந்தும்  44 நாடுகள் கலந்துக்கொண்டன. இதில், ‘ஹெவி வெயிட்’ பிரிவில் 100 கிலோ எடை கொண்ட போட்டியாளர்களுக்கான பிரிவில் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் மணி கலந்து கொண்டார்.

    இந்தப் போட்டியில் ராஜேந்திரன் மணி வென்று அசத்தினார்.  இந்த வெற்றியின் மூலம் ஐந்தாவது முறையாக இவர் உலக ஆணழகன் பட்டம் பெற்றவர் என்ற சாதனையை புரிந்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து, தற்போது பலரும் ராஜேந்திரன் மணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மணி. இவர் மாடம்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    அதிகரிக்கப்பட்ட நீர் திறப்பால் சீறிப்பாயும் செம்பரம்பாக்கம் ஏரி! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....