காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கோரிய தமிழக அரசின் மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
மேலும், இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடக விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
எம்எல்ஏக்களின் தகுதிநீக்க நடவடிக்கைகளை தள்ளிவையுங்கள்- உச்சநீதிமன்றம்