Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமேகதாது பற்றிய தமிழக அரசின் மனு மீது அடுத்த வாரம் விசாரணை

    மேகதாது பற்றிய தமிழக அரசின் மனு மீது அடுத்த வாரம் விசாரணை

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கோரிய தமிழக அரசின் மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

    இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. 

    மேலும், இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடக விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். 

    எம்எல்ஏக்களின் தகுதிநீக்க நடவடிக்கைகளை தள்ளிவையுங்கள்- உச்சநீதிமன்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....