புரோ கபடி லீக் போட்டியின் 12-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 22-27 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா அணியிடம் தோல்வி அடைந்தது.
புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 12-வது ‘லீக்’ ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
இந்த தொடரில் முதல் வெற்றியை பதிக்குமா என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புடன் நேற்றைய போட்டியானது தொடங்கியது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஹரியானா அணி 27-22 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக தமிழ் தலைவாஸ் அணி குஜராத்துடன் 31-31 என்ற கணக்கில் ஆட்டத்தை ‘டை’ செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘ட்ரோனி’ ட்ரோன் கேமராவை அறிமுகம் செய்து வைத்த ‘தோனி’ தல! இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா ?