முதல்வரின் விருதுக்கு தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான சிறந்த மாநகராட்சி, நகராட்சியை தேர்வு செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதன்படி, சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடமும், குடியாத்தம் இரண்டாவது இடமும், தென்காசி மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.
மதிப்பெண் அடிப்படையில், மாநகராட்சிகளில் முதலிடம் பிடித்த சேலம் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம், நகராட்சிகளில் முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு ரூ.15 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
பொதுமக்களுக்கு அடிபப்டை வசதிகளை பூர்த்தி செய்தல், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வாழ்வியல் சூழ்நிலை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்து முதல்வர் விருது வழங்கப்படுகிறது.
வருகிற திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் 75-வது சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க உள்ளார்.