தமிழ்நாடு காவலர் தேர்வு முறையில் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 30-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி, ஒட்டுமொத்தமாக 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.tnsurb.tn.gov.in என்ற இணையதளத்தை அனுகும்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவலர் தேர்வு முறையில் சில மாற்றங்களை புகுத்தியுள்ளது.
அதன்படி, 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் காவலர் தேர்வில் எழுத்து தேர்வுக்கு 70 மதிப்பெண்களும், உடல் திறன் தேர்வுக்கு 24 மதிப்பெண்களும், சிறப்பு மதிப்பெண்களாக 6 மதிப்பெண்களும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக காவலர் தேர்வுகளில் எழுத்து தேர்வுக்கு 80 மதிப்பெண், உடல் திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண், சிறப்பு மதிப்பெண் 5-ஆக வழங்கப்பட்டு வந்தது.
தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள மேற்கூறிய பணியிடங்களுக்கான விண்ணப்பமானது ஆகஸ்ட் 15-ம் தேதி வரையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு!