சொத்துப்பட்டியல் விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அனுப்பிய நோட்டீஸிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சொத்துப்பட்டியல் என்ற பெயரில் அவதூறு கூறி காணொளி வெளியிட்டதாக முன்னதாக திமுக சார்பிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து, டி.ஆர்.பாலு அனுப்பிய நோட்டீஸில், அண்ணாமலை தந்து கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி ரூபாய் இழப்பீடு தஹ்ரா வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலை தற்போது டி.ஆர்.பாலு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அவர், மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும் தனது குரலை ஒடுக்கும் முயற்சியே இது எனவும், டி.ஆர்.பாலு குறித்து தாம் வெளியிட்ட குற்றச்சாட்டுகள், புள்ளி விவரங்கள் அனைத்தும் சரியானவை தான் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கோரப்போவதில்லை எனவும், இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் நலன் கருதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி மாற்றம்