Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பத்திரிகையாளர்களை தாக்கிய தமன்னாவின் பாதுகாவலர்கள்! வாக்குவாதத்தால் நடந்த விபரீதம்

    பத்திரிகையாளர்களை தாக்கிய தமன்னாவின் பாதுகாவலர்கள்! வாக்குவாதத்தால் நடந்த விபரீதம்

    நடிகை தமன்னாவின் பாதுகாவலர்கள் புகைப்படக்காரர்களைத் தாக்கிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    கல்லூரி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பலரையும் கவர்ந்த தமன்னா பிறகு பல தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் போன்ற உச்ச நட்சத்திர திரைப்படங்களிலும் தமன்னா நடித்திருக்கிறார். தமிழ் மொழி மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்த இவர் முதல்முறையாக தற்போது மலையாளத் திரைப்பட உலகில் அறிமுகமாக உள்ளார். 

    இந்நிலையில், தற்போது அவர் மதுர் பண்டார்கள் இயக்கியுள்ள ‘பப்ளி பவுன்சர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 23-ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. 

    இதையும் படிங்க: 3 ஆண்டுகளாக வெளியேவராமல் வீட்டுக்குள்ளேயே… இருட்டில் இருந்த குடும்பம்! பாசத்தால் நடந்த அவலம்

    இந்த திரைப்படத்தின் புரோமஷன் பணிகளுக்காக நடிகை தமன்னா நேற்று ஹைதரபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார். அப்போது, புகைப்பட கலைஞர்கள் தமன்னாவை புகைப்படம் எடுக்க அனுமதி கோரியுள்ளதாக தெரிகிறது. 

    ஆனால், தமன்னாவில் பாதுகாவலர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கமுடியாது என்று கூறியுள்ளனர். அதே சமயம், புகைப்பட கலைஞர்களையும், ஊடகத்தினரையும் அவதூறாகப் பேசியுள்ளனர். 

    இந்நிகழ்வுகளால், இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் பாதுகாவலர்கள் புகைப்படக்காரர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவலாகி வருகிறது. 

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....