Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசையத் முஷ்டாக் அலி கோப்பை; சண்டிகரை ஆட்டம் காண வைத்த தமிழகம்...

    சையத் முஷ்டாக் அலி கோப்பை; சண்டிகரை ஆட்டம் காண வைத்த தமிழகம்…

    இருபது ஓவர் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சண்டிகர் அணியை தமிழக அணி வீழ்த்தியுள்ளது. 

    இருபது ஓவர் சையத் முஷ்டாக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சண்டிகர் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி. 

    லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழகம் – சண்டிகர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சண்டிகர் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தமிழக அணி கேப்டன் பாபா அபரஜித் நன்கு விளையாடி 55 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். 

    தமிழக அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. தமிழக அணி அற்புதமாகப் பந்துவீசியதால் சண்டிகர் அணி 18.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாக்மெந்தர் லேதர் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளும் நடராஜன், சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

    இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது தமிழகம். சண்டிகர் அணி 5 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது. 

    இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி அதிரடி உத்தரவு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....