Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'அவர் தற்கொலை செய்யவில்லை..' - நடிகர் சுஷாந்த் சிங் மறைவு குறித்த பிணவறை தொழிலாளர் பேச்சு

    ‘அவர் தற்கொலை செய்யவில்லை..’ – நடிகர் சுஷாந்த் சிங் மறைவு குறித்த பிணவறை தொழிலாளர் பேச்சு

    நடிகர் சுஷாந்த் சிங் மறைவு குறித்த பிணவறை தொழிலாளரின் கருத்து இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். இவரின் இறப்புச் சம்பவமானது திரையுலகத்திலும், பொது மக்களிடத்திலும் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தி திரையுலகினரில் பலரிடத்தில் சுஷாந்த் சிங் மறைவு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்கொலை என்று கூறினாலும், அவரின் தற்கொலைக்கான சரியான காரணம் இன்று வரை புலப்படவில்லை. 

    சுஷாந்த் சிங் காலமாகி இரண்டு வருடங்களானாலும், இன்று வரை அவரின் மறைவு இந்தி திரையுலகத்தில் அவ்வபோது பேசு பொருளாய் எழுந்த வண்ணம் உள்ளது. 

    இந்நிலையில், பிணவறை தொழிலாளர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி, ” சுஷாந்த் சிங் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டு இருக்கலாம். அவரது உடலை பார்த்ததும் எனக்கு தோன்றியது. நான் எனது மேலதிகாரிக்கு இது குறித்து கூறினேன். இரவில்தான் அவர்கள் உடற்கூராய்வை செய்தனர். அவர்கள் மொபைலில் புகைப்படம் மட்டுமே எடுத்துக் கொண்டனர். வீடியோ எடுக்கவில்லை. சரியான முறையில் அவர்கள் இதை செய்யவில்லை”  என்று தெரிவித்துள்ளார். 

    பிணவறை தொழிலாளரின் இந்த கருத்து இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....