Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉள்ளாடைக்குள் கிலோ கணக்கில் தங்கத்தை மறைத்து கடத்திய இளம்பெண்

    உள்ளாடைக்குள் கிலோ கணக்கில் தங்கத்தை மறைத்து கடத்திய இளம்பெண்

    கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் துபாயில் இருந்து கிலோ கணக்கில் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கேரள மாநிலம், மலப்புரம் அருகில் கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு இளம்பெண் தங்க கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார். 

    கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாலா. இவருக்கு வயது 19. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தார். அவர் விமானத்தை விட்டு இறங்கியதும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் சோதனை கருவி அவரிடம் தங்கம் இருப்பதற்கான எச்சரிக்கை ஒலியை எழுப்பியது. இருப்பினும் அவர் தன்னிடம் தங்கம் இல்லை என மறுத்தார். 

    இருப்பினும் சுங்க அதிகாரிகள் தீவிர சோதனைக்கு அவரை உட்படுத்தினர். இந்நிலையில் அவர் தங்கத்தை பசைவடிவில் மாற்றி 3 பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து, அதை உள்ளாடைக்குள் வைத்து தைத்து, மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். 1.9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், இதன் மதிப்பு ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பு உடையதாக இருக்கும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ‘அவர் தற்கொலை செய்யவில்லை..’ – நடிகர் சுஷாந்த் சிங் மறைவு குறித்த பிணவறை தொழிலாளர் பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....