விஜய் ஆண்டனி பற்றிய தவறான வதந்திகளை நம்ம வேண்டாம் என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது மழை பிடிக்காத மனிதன், அக்னிச் சிறகுகள், பிச்சைக்காரன்-2 போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் பிச்சைக்காரன்-2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது.
இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இயக்கவும் செய்கிறார் விஜய் ஆண்டனி. மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது, படகு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, விஜய் ஆண்டனி உடல்நிலைக் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.
இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி 2 நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துவிட்டார். 2 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கூடிய சீக்கிரம் ரசிகர்கிட்ட விடியோ மூலமா பேசுவார், ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். விஜய் ஆண்டனி பற்றிய தவறான வதந்திகளை நம்ம வேண்டாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைகளை களைந்து, நியூசிலாந்துக்கு எதிரான தொடரைக் கைப்பற்றுமா இந்தியா…