Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பாலாவின் திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதில் வேறு நடிகர் ஒப்பந்தம்; வெளிவந்த தகவல்..

    பாலாவின் திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதில் வேறு நடிகர் ஒப்பந்தம்; வெளிவந்த தகவல்..

    வணங்கான் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    தென்னிந்திய நடிகர் சூர்யா நடிக்க, பாண்டிராஜ் இயக்கத்தில் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான், எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. 

    இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சூர்யா- பாலா கூட்டணியில் வெளிவந்த நந்தா மற்றும் பிதாமகன் போன்ற திரைப்படங்கள் உருவாகி பெரும் வெற்றிப்பெற்றன. இந்த வெற்றிப்பயணம் மீண்டும் தொடருமேன ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

    மேலும்,  சூர்யா- பாலா கூட்டணியில் உருவாகயிருந்த திரைப்படத்திற்கு ‘வணங்கான்’ என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் படப்படிப்பு ஆரம்பித்ததில் இருந்து இயக்குநர் பாலாவுக்கும் – நடிகர் சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு அதீதமாக ஏற்படுவதாக அவ்வபோது தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. 

    இதைத்தொடர்ந்து, ‘வணங்கான்’ திரைப்படம் நின்று விட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், இது குறித்து படக்குழு எந்தவித தகவல்களையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில், இயக்குநர் பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி,  கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தம்பி சூர்யா படத்திலிருந்து விலகிக் கொள்கிறார். இது இருவரும் இணைந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக கதாநாயகனாக நடிக்க அதர்வா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இயக்குநர் பாலா இயக்கத்தில் பரதேசி என்ற திரைப்படத்தில் அதர்வா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    புரோ கபடி; வெற்றிப்படிகட்டில் குஜராத், டெல்லி…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....