நேற்று நடைபெற்ற புரோ கபடி போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் வெற்றிப்பெற்றன.
புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் யு மும்பா மற்றும் தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இந்த ஆட்டங்களில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 44-30 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, யு மும்பா மற்றும் தபாங் டெல்லி இடையே நடைபெற்ற ஆட்டத்தில், 41 – 24 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி வெற்றி பெற்றது.
மேலும், இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள புரோ கபடி போட்டியில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூர் புல்ஸ், தமிழ் தலைவாஸ் மற்றும் யுபி யுதாஸ் ஆகிய அணிகள் களம் காண உள்ளன.
துணிவு ரிலீஸ் ஆகுதுனு சொன்னப்போ….நடிகர் விஜய் ரியாக்ஷன் இதுதானா?