அம்பேத்கர் காவி உடை, விபூதி, குங்குமம் வைத்தவாறு இடம்பெற்றிருந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் அபேத்கர் உருவ சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில், அம்பேத்கர் உருவ படத்தில் காவை உடை அணிவித்து விபூதி பூசி, குங்குமம் வைத்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த போஸ்டரில் “காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம்” என எழுதி இருந்தது.
காவி உடை, விபூதி, குங்குமம் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருப்பட போஸ்டர் கும்பகோணத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதைத்தொடர்ந்து,அம்பேத்கர் உருவப்படத்திற்கு காவி உடை, விபூதி, குங்குமம் வைக்கப்பட்டு போஸ்டர் அடிக்கப்பட்டது தொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.
புரோ கபடி; வெற்றிப்படிகட்டில் குஜராத், டெல்லி…