Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி மாணவி வழக்கு; மேல்முறையீட்டில் நீதிபதிகள் கேட்ட கேள்வி..

    கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு; மேல்முறையீட்டில் நீதிபதிகள் கேட்ட கேள்வி..

    மாணவியின் தாயார் மேல்முறையீட்டு மனு குறித்து பள்ளி நிர்வாகிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்கொலை என்று தற்போது கூறப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கு சமந்தமாக,  சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களின் ஜாமீனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மாணவி ஶ்ரீமதியின் தாயார் மேல்முறையீடு செய்திருந்தார். 

    இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மாணவிக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர். இதற்கு மனுதாரார் தரப்பு வழக்கறிஞர் உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை எடுத்துரைத்தார். இருப்பினும், மாடியில் இருந்து குதித்ததால் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்தானே? என்று சந்தேக கேள்வி எழுப்பினர். 

    இதன்பின்பு, மாணவியின் தாயார் மேல்முறையீட்டு மனு குறித்து பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். 

    புகையிலை தொடர்பாக நியூசிலாந்தின் புதிய சட்டம்…ஆச்சரியத்தில் உலக நாடுகள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....