Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மறைந்த பூ ராமு; இரங்கல் தெரிவிக்கும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள்! உருகிய இயக்குநர்!

    மறைந்த பூ ராமு; இரங்கல் தெரிவிக்கும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள்! உருகிய இயக்குநர்!

    பிரபல குணச்சித்திர நடிகர் பூ ராமு அவர்கள் இயற்கை எய்தினார். தனது எதார்த்தமான நடிப்பால் பல கதாப்பாத்திரங்களுக்கு இவர் உயிர் கொடுத்துள்ளார். 

    இயக்குநர் சசி இயக்கத்தில், ஶ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘பூ’ என்ற அற்புதமான திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பலரையும் கவர்ந்தார், ராமு! பேனாக்காரன் என்கிற கதாப்பாத்திரத்தில் கனக்கச்சிதமாக நடித்திருப்பார். அத்திரைப்படத்தின் வாயிலாகவே இவர் ‘பூ ராமு’ என்று அழைக்கப்பட்டார். 

    பூ ராமு அவர்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், சூரரைப் போற்று, கர்ணன் போன்ற திரைப்படங்களில் மிகவும் நேர்த்தியாக அதே சமயம் கணமான கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தி அனைவரின் மனதிலும் பதிந்தார். 

    நீர்ப்பறவை திரைப்படத்தில் அப்பாவாக, பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கல்லூரி முதல்வராக இவர் நடித்தை அவ்வளவு எளிதில் எவராலும் மறக்க முடியாது. சிறந்த குணச்சித்திர நடிகர் என்று பெயர் வாங்கிய ராமு, நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    ஆனால், சிகிச்சை பலனளிக்காததால் நேற்று பூ ராமு அவர்கள் காலமானார். இவரின் இறப்புக்கு திரையுலகை சார்ந்தவர்களும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    உதயநிதி ஸ்டாலின் ‘தேர்ந்த நடிப்பாலும், சிறந்த கதாபாத்திர தேர்வாலும் முக்கியமான படங்களில் பணியாற்றி பாராட்டை பெற்ற குணச்சித்திர நடிகர் அண்ணன் ‘பூ’ராமு அவர்களின் மறைவு கலையுலகிற்குப் பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார். 

    மம்முட்டி அவர்களும் ‘பூ’ராமு இறந்த செய்தியைக்கேட்டு துக்கமடைந்ததாக தெரிவித்து தனது இரங்கலை பதிவுசெய்துள்ளார். 

    நீர்ப்பறவை திரைப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, நீர்ப்பறவை மீனவா, இடம் பொருள் ஏவல் சிகப்புத் துண்டு மாரியப்பா,  கண்ணே கலைமானே விவசாயி, இனி நான் காண வைத்திருக்கும் பாத்திரங்கள் எப்படி நிறையும்? என்று கேள்வி கேட்டு தனது இரங்கலைப் பதிவு செய்திருக்கிறார். 

    திரைப்படங்கள் மட்டுமின்றி பல நாடகங்களை இவர் இயற்றி நடித்துள்ளார். முதலாளித்துவம், சுரண்டல், ஆகியவற்றுக்கு எதிரான கருத்துகளை தனது நாடகங்களில் இவர் அதிகம் பேசியுள்ளார். 

    இந்த விஷயத்துல விக்ரமும் விஜய்சேதுபதியும் ஒன்னுதான்! – சாமுராய்க்கும் 96-க்கும் உள்ள பந்தம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....