Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கோயிலை புனரமைக்க நிதி வசூல் செய்தது ஒரு குற்றமா?.. சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

    கோயிலை புனரமைக்க நிதி வசூல் செய்தது ஒரு குற்றமா?.. சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

    பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். 34 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கார்த்திக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கார்த்திக் கோபிநாத் கைது குறித்து பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோவில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக சர்ச்சை வெடித்தது. மாற்று மதத்தினர் தான் இந்த கோவில் சிலைகளை இடித்து விட்டதாக இந்த அமைப்பினர் புகார் தெரிவித்து வந்தனர்.

    பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் இணையதளம் மூலமாக சிறுவாச்சூர் கோவிலை சரி செய்யப் போகிறேன் என்று அறிவித்தார் . இதற்கு பலரும் நிதி உதவி செய்து வந்தனர். இந்த நிதி உதவி மொத்தமாக 34 லட்சம் ரூபாய் வசூலாகி இருக்கிறது. இந்த தொகையை அவர் மோசடி செய்து விட்டதாக புகார் கூறப்பட்டிருக்கிறது.

    கார்த்தி கோபிநாத் வசித்து வரும் சென்னை ஆவடி பகுதியில் இந்த புகார் அளிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தங்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்க திமுக அரசு முயற்சிக்கிறது. கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக நிற்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

    அதேபோல் பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, கார்த்திக் கோபிநாத் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது . இந்துக்களோ இந்து கோவில்களோ பாதிக்கப்பட்டால் அதற்கு உதவிட யாரும் முன்வரக்கூடாது என்று பயமுறுத்தும் இந்து விரோத அரசின் வன்மத்தின் வெளிப்பாடு இது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

    இவர்களை தொடர்ந்து தற்போது, கார்த்திக் கோபிநாத் கைதை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் “சென்னையை அடுத்த ஆவடி போலீஸாரால் விஸ்வ இந்து பரிசத் நிர்வாகி கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இளைய பாரதம் என்கிற யூடியூப் சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத் ஆன்மீக சிந்தனை உள்ள இளைஞர். ஒரு கோயிலை புனரமைக்க நிதி வசூல் செய்துள்ளார். அது தவறா. கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தது அரசியலமைப்பு சட்டம் 25 ஐ மீறும் செயலாகும். இதனால் கார்த்திகை கைது செய்த போலீஸாருக்கு எதிராக வழக்கு தொடர்வேன். பாஜக மீது கோபத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் இது போன்ற பொய்யான நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். தமிழக போலீஸ் நடவடிக்கைகள் தவறான பாதையில் செல்வதால் நானே இந்த விஷயத்தில் நேரடியாக களமிறங்கப் போகிறேன்” என சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த டுவிட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....