‘குரூப்-1’ தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் நாளை இயங்குவது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக ஒருநாள் விடுமறை அளிக்கப்பட்டது. அக்டோபர் 25-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை பள்ளிகள் செயல்படும் என முன்னவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை பள்ளிகள் செயல்படவுள்ளது.
இதனால், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்தபடி, குரூப்-1 முதல்நிலை தேர்வு 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குரூப் 1 தேர்வுக்கான கண்காணிப்பாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவைகளோடு, நாளை ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு பருவ இடை தேர்வு நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படியாக சூழல்கள் இருக்க, குரூப் 1 தேர்வு பணி ஒதுக்கப்பட்ட ஆசிரியர்கள், பள்ளிகளில் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை பள்ளிகள் இயங்குவது குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் குழப்ப மனநிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: வரும் சனிக்கிழமை 19 அன்று அனைத்து பள்ளி , கல்லூரிகளுக்கு முழு வேலைநாள்: தமிழக அரசு அறிவிப்பு