சென்னை, கொரட்டூர் கிழக்கு நிழல் சாலையில் ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகம் சார்பில் ‘வீதி திருவிழா’ கோலாகலமாக நடைபெற்றது.
நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற வீதி திருவிழாவில் போதை இல்லா தமிழகம், போதை ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சாலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விளையாட்டு என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும், வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்த சாலையின் நடுவில் பல்லாங்குழி, சிலம்பம், செஸ், கிரிக்கெட், வாலிபால் போன்ற 20-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் விளையாடப்பட்டது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
நாட்டுப்புற இசை மற்றும் மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளிலும் இளம்பெண்கள், சிறுமிகள் உள்பட பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.
போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிகளில், கொரட்டூர் காவல்துறை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sunday Morning at Korattur Street festival🔥#sundayvibes #streetfestival pic.twitter.com/2vN8s2WgI8
— Suriya Fans Rage🔥 (@4006Akash) August 28, 2022